எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

Guest Authorகட்டுரைகள்

ஆறுதல் பகிர்தல்

என்னுடைய மகள் ஹேலி என்னைப் பார்க்க வந்தாள். கல்லும் என்னும் அவளுடைய மகன் அணிந்திருந்த ஆடை சற்று வித்தியாசமாய் இருந்தது. “ஸ்க்ராட்ச் மி நாட்” என்றழைக்கப்படும் நீண்ட கையுறைகளை மட்டும் கொண்ட ஒரு வித்தியாசமான ஆடை. என்னுடைய பேரன் எக்ஸிமா என்னும் தோல் வியாதியினால் கஷ்டப்பட்டான். அதினால் அவனுடைய தோல் அடிக்கடி அரிப்பு எடுக்கக்கூடிய வகையில் கரடுமுரடாய் மாறும். இந்த ஸ்க்ராட்ச் மி நாட் ஆடை அவனை சொரிந்து காயம் ஏற்படுத்துவதிலிருந்து தடுக்கிறது என்று ஹேலி விளக்கமளித்தாள். 

ஏழு மாதங்கள் கழித்து ஹேலியின் தோல் அரிப்பெடுத்தது. அவளால் சொறியாமல் இருக்கமுடியவில்லை. இப்போதுதான் தெரிகிறது தன் மகன் எவ்வளவு கடினப்பட்டிருப்பான் என்று ஹேலி சொன்னாள். நானும் இந்த ஸ்க்ராட்ச் மி நாட் ஆடையை அணிய வேண்டும் என்று அவள் சொன்னாள். 

ஹேலியின் இந்த அனுபவம், 2 கொரிந்தியர் 1:3-5ல் “எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர். எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது” என்ற பவுலின் வார்த்தைகளை நினைவுபடுத்தியது. 

சிலவேளைகளில் தேவன் நம்மை வியாதி, இழப்பு, மற்றும் போராட்டம் போன்ற பாதைகளினூடாய் அனுமதிப்பார். நம்முடைய உபத்திரவங்களின் மூலமாய், நமக்காக மகா உபத்திரவத்தின் பாதையில் கடந்துபோன இயேசுவின் பாடுகளை தேவன் நமக்கு கற்பிக்கிறார். ஆறுதலுக்காகவும் பெலத்திற்காகவும் நாம் அவரைச் சாரும்போது, உபத்திரவத்திலுள்ளவர்களை நாமும் ஆறுதல்படுத்தவும் பலப்படுத்தவும் முடியும். நம்மை தேவன் நடத்திவந்த பாதையை மனதில் வைத்து மற்றவர்களை ஆறுதல்படுத்துவோம். 

பிரித்தெடுத்தல்

“டக் டக்ஸ்” அல்லது “ஆட்டோ” என்று சொல்லப்படுகிற இந்தியாவின் மூன்று சக்கர வாகனங்கள் பெரும்பாலானவர்கள் பயணத்திற்கு வசதியாக இருக்கும். சென்னையில் வாழும் மாலா என்னும் பெண், ஆட்டோவை ஒரு மிஷன் பணித்தளமாய் பார்த்தாள். ஒரு நாள் ஆட்டோவில் ஏறி, சகஜமாய் பழகி, மார்க்கத்தைப் பற்றிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஓட்டுநர் ஒருவரைக் கண்டாள். அடுத்த முறை அவரை சந்திக்கும்போது அவருக்கு சுவிசேஷத்தை சொல்லிவிட வேண்டும் என்றுஅவள் இருதயத்தில் தீர்மானித்தாள்.

“தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய” என்ற பவுலின் அறிக்கையோடே ரோமர் நிருபம் துவங்குகிறது (ரோமர் 1:1). சுவிசேஷத்தைக் குறிக்கும் “இவாஞ்சிலியோன்” என்னும் கிரேக்கப் பதத்திற்கு “நற்செய்தி” என்று பொருள். தேவனுடைய சுவிசேஷத்தைக் கூறுவதே தன்னுடைய நோக்கம் என்பதை பவுல் கூறுகிறார். 

அந்த நற்செய்தி என்ன? அது தேவனுடைய குமாரனைக் குறித்த நற்செய்தி என்று ரோமர் 1:3 சொல்லுகிறது. அந்த நற்செய்தியே, இயேசு! நம்முடைய பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை விடுதலையாக்கவே இயேசு வந்திருக்கிறார் என்னும் செய்தியை அறிவிக்கும் பாத்திரங்களாய் தேவன் நம்மை தெரிந்தெடுத்திருக்கிறார். என்னே தாழ்மையான சத்தியம்!

நற்செய்தியை பகிர்ந்துகொள்வது, கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு கொடுக்கப்பட்ட ஒரு சிலாக்கியம். மற்றவர்களை இந்த விசுவாசத்திற்கு உட்படுத்த நாம் கிருபை பெற்றிருக்கிறோம் (வச.5-6). நாம் ஆட்டோவில் பயணித்தாலும் அல்லது எங்கே இருந்தாலும், நம்மை சுற்றியுள்ள மக்களிடம் சுவிசேஷத்தின் ஆச்சரியமான செய்தியை பகிர்ந்துகொள்ள தேவன் நம்மை பிரித்தெடுத்திருக்கிறார். மாலாவைப் போல ஒவ்வொரு நாளும் இயேசுவைக் குறித்த நற்செய்தியை அறிவிக்க நாமும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள பிரயாசப்படுவோம். 

ராஜாவின் பந்தியில்

“அதின் கால்கள் துண்டிக்கப்படவேண்டும், ஆனால் அது உயிர் வாழும்” என்று விலங்கியல் மருத்துவர் சொன்னார். தன் காரில் அடிபட்ட ஒரு தெரு நாயினை என் நண்பர் மருத்துவரிடத்தில் கொண்டுவந்து சேர்த்தார்.இதின் மருத்துவக் கட்டணத்தை செலுத்தவேண்டும், அத்துடன் அதை தொடர்ந்து பராமரிக்கவேண்டும், நீங்கள் தான் அதின் உரிமையாளரா? என்று மருத்துவர் கேட்டார். “இப்போதிலிருந்து நான் தான்” என்று என் நண்பர் பதிலளித்தார். அவருடைய கரிசணை, ஓர் அழகான வீட்டில் அந்த நாய்க்கு அடைக்கலம் கொடுத்தது.

மற்றவர்களின் கரிசனைக்கு தான் பாத்திரவான் அல்ல என்று தன்னை ஒரு செத்த நாயாக மேவிபோசேத் எண்ணியிருந்தான் (2 சாமுவேல் 9:8). விபத்தில் முடவனான இவன், பாதுகாப்பிற்காகவும் தேவைக்காகவும் மற்றவர்களை சார்ந்து வாழவேண்டியிருந்தது (4:4). இவனுடைய தாத்தாவாகிய சவுலின் மரணத்திற்கு பின்பு தோன்றிய புதிய ராஜாவாகிய தாவீதுக்கு இவன் பயந்திருந்தான். ராஜ்யத்திற்கு எதிரானவர்களை கொன்றுபோடும் வழக்கம் அந்நாட்களில் இருந்தபடியால் தாவீது தன்னைக் கொன்றுவிடுவானோ என பயந்தான். 

எனினும் தன் சிநேகிதனான யோனத்தானின் மீதிருந்த அன்பினிமித்தம் அவனுடைய மகனான இந்த மேவிபோசேத்தை தன்னுடைய மகனாகக் கருதி அவனுடைய பாதுகாப்பை உறுதியளித்தான் (9:7). அதேபோன்று ஒரு காலத்தில் தேவனுடைய பகைஞர்களாய் மரணத்திற்கு பாத்திரவான்களாயிருந்த நம்மை இயேசு இரட்சித்து, அவரோடு பரலோகத்தில் நித்தியமாய் இருக்கும்படி செய்தார். இதையேதான் தேவனுடைய ராஜ்யத்தின் பந்தியில் பங்கேற்பது என்று லூக்கா தன்னுடைய சுவிசேஷத்தில் குறிப்பிடுகிறார் (லூக்கா 14:15). இங்கே நாம் ராஜா வீட்டுப் பிள்ளைகள்! என்னே விலையேறப்பெற்ற சிலாக்கியம் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது! நன்றியோடும் மகிழ்ச்சியோடும் அவரை கிட்டிச் சேருவோம்.

சாதாரணமானது ஒன்றுமில்லை

தன் 90ஆம் அகவையில் அனிதாவின் உயிர் தூங்கிக்கொண்டிருக்கும்போதே பிரிந்தது. அமைதியான இந்த உயிர் பிரிவு அவர்களின் அமைதியான வாழ்க்கையை பிரதிபலித்தது. ஒரு விதவையாய் தன் பிள்ளைகளையும் பேரன் பேத்திகளையும் பராமரித்த அவர்களுக்கு திருச்சபையில் ஒரு வாலிப சிநேகிதியும் இருந்தாள். 

அனிதா நினைவுகூறும் வகையில் திறமையானவரோ அல்லது சாதனையாளரோ அல்ல. ஆனால் அவருடைய ஆழமான விசுவாசத்தை அவரை அறிந்த யாவரும் அறிவர். என்னுடைய சிநேகிதி ஒருவர் சொல்லும்போது, “ஒரு பிரச்சனையில் நின்று என்ன செய்வதென்று தெரியாமல் நான் திகைக்கும்போது, எந்த ஒரு பிரபல பிரசங்கியாரின் வார்த்தைகளும் எனக்கு நினைவுக்கு வருவதில்லை; அனிதா சொன்ன வார்த்தைகள் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது” என்று சொன்னாள்.

நம்மில் அநேகர் அனிதாவைப் போன்றே சாதாரணமான மனிதர்களாய் சாதாரணமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கலாம். நம்முடைய பெயர் செய்திகளில் இடம்பெறாமலிருக்கலாம். நம்மை கனப்படுத்தும் வகையில் நினைவு மண்டபம் கட்டப்படாமல் இருக்கலாம். ஆனால் கிறிஸ்துவுக்குள் வாழும் விசுவாச வாழ்க்கை என்பது சாதாரணமான ஒன்று கிடையாது. எபிரெயர் 11ஆம் அதிகாரத்தின் விசவாசப்பட்டியலில் இடம்பெற்றுள்ள சில நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை (வச.35-38). அவர்கள் குழப்பத்தின் பாதையில் கடந்துபோய், இவ்வுலகத்தில் வாக்குப்பண்ணப்பட்ட வெகுமதிகளை இவ்வாழ்க்கையில் பெறவில்லை (வச.39). ஆயினும் அவர்கள் கீழ்ப்படிந்ததினால், அவர்களின் விசுவாசம் வீணாய்ப் போகவில்லை. தேவன் அவர்களின் மதிப்பு குறையாமல் அவர்களின் வாழ்க்கையை அபரிவிதமாய் பயன்படுத்தினார் (வச.40).

உங்களுடைய வாழ்க்கை மிகச் சாதாரணமாய் கடந்து போகிறதே என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் விசுவாசத்தில் வருகிற வாழ்க்கைக்கு நித்திய மேன்மை இருக்கிறது என்பதை நினைவில் கொள்வோம். நாம் சாதாரணமானவர்களாய் இருந்தாலும், அசாதாரணமான விசுவாசத்தின் பிரதிநிதிகளாய் நம்மால் மாறமுடியும். 

உங்களுக்குத் தேவையான அனைத்தும்

சாப்பாட்டு அறை மேசையின் மேல் அமர்ந்துகொண்டு என்னைச் சுற்றி நடந்துக்கொண்டிருந்த இன்பமான குழப்பங்களை நோக்கிக்கொண்டிருந்தேன். அத்தைகள், மாமாக்கள், பிள்ளைகள், சகோதர சகோதரிகள், இன்னும் மற்ற உறவினர்கள் எங்களுடைய குடும்பத்தின் கூடுகைக்கு வந்து ஒன்றாக உணவை மகிழ்ச்சியுடன் ருசித்துக்கொண்டிருந்தனர். நானும் அதை ருசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் ஒரு எண்ணம் என் இருதயத்தை பிளந்தது: உங்களுக்கென்று பிள்ளைகள் இல்லாத, சொந்தமாக ஒரு குடும்பம் இல்லாத ஒரே பெண் நீங்கள்தான்.

என்னைப் போல தனிமையாக இருக்கும் பெண்களுக்கு இதேபோலத்தான் எண்ணம் இருக்கிறது. திருமணத்தையும் குழந்தைகளையும் அதிகமாக மதிப்பிடும் ஆசியக் கலாச்சாரமான, என்னுடைய கலாச்சாரத்தில், தனக்கென்று ஒரு குடும்பம் இல்லாத சூழ்நிலை முழுமையடையாத ஒரு உணர்வை ஏற்படுத்தும். நீங்கள் யார் என்பதை வரையறுத்து, உங்களை முழுமையடைய வைக்கும் ஒன்று உங்களிடத்தில் இல்லாதது போல் தோன்றலாம். 

அதனால் தான் கர்த்தர் என் “பங்கு” என்ற சத்தியம் எனக்கு அதிக ஆறுதலைக் கொடுக்கிறது (சங்கீதம் 73:26). இஸ்ரவேல் கோத்திரத்தாருக்கு அவரவருடைய சுதந்திரம் பங்கிடப்பட்டது. ஆனால் லேவி கோத்திரத்தாருக்கு எதுவும் கொடுக்கப்படவில்லை; மாறாக, கர்த்தரே அவர்களுக்கு பங்காகவும் சுதந்தரமாகவும் இருப்பதாக வாக்களித்தார் (உபாகமம் 10:9). அவர்கள் அவரிடத்தில் முழு திருப்தியடைந்து அவர்களுடைய எல்லாத் தேவைகளையும் அவர் கொடுப்பார் என்று நம்பினார்கள். 

நம்மில் சிலருக்கு பற்றாக்குறை என்ற உணர்வு குடும்பத்தோடு தொடர்புடையதாக இல்லாதிருக்கலாம். ஒருவேளை நாம் ஒரு நல்ல வேலைக்காக அல்லது உயர் கல்விக்காக முயற்சிக்கலாம். நம்முடைய சூழ்நிலை எதுவாக இருந்தாலும், தேவன் நம்முடைய பங்காகத் தழுவிக்கொள்ளலாம். அவர் நம்மை முழுமையடையச் செய்கிறார். அவரிடம் நமக்கு எந்தக் குறையும் இல்லை. 

தேவன் நம்மை சுமக்கிறார்

சென்னைப் பட்டணத்தில் 2015ஆம் ஆண்டு, வரலாற்றில் இதுவரை இடம்பெறாத பெருவெள்ளம் வந்து பலரை பாதிப்பிற்குள்ளாக்கியது. வீட்டில் இனி தங்கியிருப்பது சாத்தியமல்ல என்று எண்ணிய அவர், தன் சிறு குழந்தையுடன் வெளியேறினார். அவர் பார்வையற்றவர் என்றபோதிலும் தன் மகனைக் காப்பாற்றியாக வேண்டும். தன் மகனை தன் தோள்மீது மென்மையாய் அமரச்செய்து, ஆழமான அந்த தண்ணீரில் பாதுகாப்பை நோக்கி நடக்கிறார். 

இத்தனை இடர்களையும் தாண்டி தன்னுடைய பிள்ளையைக் காப்பாற்ற ஒரு மாம்ச தகப்பன் என்னும்போது, நம்முடைய பரம தகப்பன் அவருடைய பிள்ளைகளின் மீது எந்த அளவிற்கு அக்கறை எடுத்துக்கொள்வார்! பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ஜனங்கள் விசுவாசத்தில் தடுமாற்றமடைந்த நேரத்திலும் தேவன் அவர்களை எப்படி நடத்தி வந்தார் என்பதை மோசே நினைவுகூருகிறார். தேவன் அவர்களை எப்படி மீட்டார் என்றும் வனாந்திரத்தில் அவர்களை எப்படி போஷித்தார் என்றும், எதிரிகளோடு யுத்தம்செய்து அவர்களை மேகஸ்தம்பத்தினாலும் அக்கினி ஸ்தம்பத்தினாலும் எப்படி வழிநடத்தினார் என்றும் இஸ்ரவேலர்களுக்கு நினைவுபடுத்துகிறார். அவர்களுக்கு தேவன் எப்படி ஆதரவாய் செயல்பட்டார் என்று எடுத்துரைத்த மோசே, “ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல” (உபாகமம் 1:31) அவர்களை வழிநடத்தி வந்தார் என்று சொல்லுகிறார். 

இஸ்ரவேலர்களின் வனாந்திரப் பயணம் சாதாரணமானது அல்ல; விசுவாசத்திற்கு அடிக்கடி சவாலாய் அமைந்தது. ஆனால் தேவனுடைய பாதுகாப்பிற்கும் வழிநடத்துதலுக்கும் அது தெளிவான ஆதாரம். ஒரு தகப்பன் துணிச்சலோடும் உறுதியோடும் தன் மகனை மென்மையாய் தோளில் சுமப்பதுபோல தேவன் இஸ்ரவேலைச் சுமந்தார். நம்முடைய விசுவாசத்தைச் சோதிக்கும் சவால்களை சந்திக்கும்போது அதிலிருந்து நம்மைத் தூக்கிச்செல்லும் ஆண்டவர் இருக்கிறார் என்பதை நினைவுகூருவோம்.

வெளிப்பட்ட தேவ வல்லமை

அது ஒரு மின்னல் புயல். எனது ஆறு வயது மகளும் நானும் அமர்ந்துகொண்டு கண்ணாடி கதவின் வழியாக பளிச்சென்று மின்னிய அந்த மின்னல் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தோம். “ஓ!... தேவன் எவ்வளவு பெரியவர்” என்று என்னுடைய மகள் சொல்லிக்கொண்டேயிருந்தாள். நானும் அதையேதான் யோசித்தேன். நாங்கள் எவ்வளவு சிறியவர்கள், தேவன் எவ்வளவு பெரியவர் என்று எங்களுக்கு தெளிவாய் தெரிந்தது. யோபு புத்தகத்தில், “வெள்ளத்துக்கு நீர்க்கால்களையும், இடிமுழக்கங்களோடு வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்?” என்னும் கேள்வி எனக்கு நினைவுக்கு வருகிறது (யோபு 38:24).

தேவனுடைய வல்லமையைக் குறித்து யோபுக்கு நினைவுபடுத்த வேண்டியிருந்தது (வச. 34-41). அவனுடைய வாழ்க்கை சிதைந்துபோனது. அவனுடைய பிள்ளைகள் மரிந்துபோனார்கள். அவன் உடைக்கப்பட்டான். வியாதிப்பட்டான். அவனுடைய நண்பர்கள் அவனிடத்தில் கரிசணையோடு இல்லை. அவனுடைய மனைவி அவனுடைய விசுவாசத்தை விட்டுவிட ஊக்குவித்தாள் (2:9). கடைசியில் யோபு தேவனைப் பார்த்து “ஏன்” என்று கேள்வியெழுப்புகிறான் (அதி. 24). தேவன் பெருங்காற்றிலிருந்து அவனுக்கு பதில்கொடுக்கிறார் (அதி. 38). 

உலகத்தில் காணக்கூடிய அனைத்து காரியங்களிலும் தேவனுடைய ஆளுகையை தேவன் யோபுக்கு நினைவுபடுத்துகிறார் (அதி. 38). யோபு தேற்றப்பட்டு, “என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது” (42:5) என்று பதிலளிக்கிறான். வேறுவிதமாய் சொன்னால், “இப்போது புரிந்துகொண்டேன், தேவனே! நீர் என்னுடைய வட்டத்திற்குள் பொருந்துகிறவரல்ல” என்று ஒத்துக்கொண்டான். 

வாழ்க்கை சிதறடிக்கப்படும்போது, நாம் செய்ய வேண்டிய மிக ஆறுதலான காரியம் என்னவெனில், கீழே அமர்ந்து மின்னல் மின்னுவதைப் பாருங்கள். இந்த உலகத்தை உண்டாக்கிய ஆண்டவர் எவ்வளவு பெரியவர் என்று உங்களை தேற்றிக்கொள்ளுங்கள். தேவனுடைய மகத்துவத்தையும் பராக்கிரமத்தையும் வெளிப்படுத்துகிற பாடல்களை தேர்ந்தெடுத்துப் பாடுவதின் மூலமும் அந்த விசுவாசத்தை நீங்கள் கட்ட முயற்சிக்கலாம். 

பிதாவை அறிவது

கதைகளின் படி, பிரிட்டிஷ் நடத்துனர் சர் தாமஸ் பீச்சம் விடுதியின் நடைவெளியில் ஒரு வித்தியாசமான தோற்றமுடைய பெண்ணை கண்டார். அவரை தனக்கு தெரியும் என்று நம்பினார் ஆனால் அவரால் அந்தப் பெண்ணின் பெயரை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. அவர் அந்த பெண்ணுடன் பேச நின்றார். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது அந்த பெண்ணுக்கு ஒரு சகோதரர் இருப்பதாக குழப்பத்துடன் நினைவு கூர்ந்தார். ஒரு துப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த பெண்ணிடம் அவருடைய சகோதரர் இப்பொழுது எப்படி இருக்கிறார் என்றும் இன்னும் அவர் இதற்கு முன்பு செய்து வந்த அதே வேலையை தான் இன்னும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறாரா என்றும் கேட்டார். அந்த பெண் அதற்கு “அவர் மிகவும் நன்றாக இருக்கிறார், வழக்கம்போல் வீட்டில் சும்மா இருக்கிறார்” என்றார்.
 
சர் பீச்சம்க்கு நடந்தது போன்ற தவறாக அடையாளம் கண்டுகொள்ளும் நிகழ்வு என்பது சங்கடமாக இருக்கும். ஆனால் மற்ற நேரங்களில் இதுபோன்ற நிகழ்வு இயேசுவின் சீஷர் பிலிப்புவுக்கு நடந்தது போன்று இன்னும் தீவிரமானதாக இருக்கலாம். நிச்சயமயாக சீஷர்கள் இயேசுவை அறிவார்கள், ஆனாலும் அவர் உண்மையாக யார் என்பதை முழுவதுமாக அடையாளம் காணவில்லை. அவர்கள் இயேசு, “பிதாவைகாண்பிக்க” வேண்டினார்கள். ஆனால் இயேசு அவர்களுக்கு பிரதியுத்திரமாக, “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்றார்” (யோவான் 14:8-9). தேவனுடைய தனித்துவமான குமாரனாக ஒருவரை அறிவதென்பது மற்றவரை அறிவதாகும் என்பதை இயேசு பரிபூரணமாக வெளிப்படுத்தினார் (வ 10-11).
 
நாம் எப்போதாவது தேவனுடைய குணாதிசயம் என்ன, தனித்தன்மை என்ன, அல்லது அவர் மற்றவரை பற்றி எப்படி அக்கறை கொள்கிறார் என்பதை பற்றி வியப்படைவோமானால் அதை கண்டறிய நாம் இயேசுவை நோக்கிப்பார்த்தாலே போதும். இயேசுவின் குணாதிசயம், தயவு மற்றும் கிருபை, தேவனுடைய குணாதிசயத்தை வெளிப்படுத்துகிறது. என்னதான் நம்முடைய தேவன் நம்முடைய புரிந்துகொள்ளுதலுக்கும், கிரகித்தலுக்கும் அப்பாற்பட்டவராக இருந்தாலும், அவர் இயேசுவில் தம்மை குறித்து வெளிப்படுத்திய அந்த மாபெரும் பரிசு நம்மிடம் உள்ளது.

கிருபையால் பலப்படுத்தப்பட்டது

அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, அதிலிருந்து ​​வெளியேறுவதற்கான தண்டனை மரணதண்டனை. ஆனால் யூனியன் படைகள் தப்பி ஓடியவர்களை அரிதாகவே தூக்கிலிட்டன, ஏனெனில் அவர்களின் தளபதி ஆபிரகாம் லிங்கன் கிட்டத்தட்ட அனைவருக்கும் மன்னிப்பு வழங்கினார். இதனால் கோபமடைந்த போரின் செயலாளர் எட்வின் ஸ்டாண்டன், லிங்கனின் மெத்தனத்தன்மை மட்டுமே தப்பி ஓடியவர்களை கவர்ந்ததாக இருக்கும் என்று நம்பினார். ஆனால் லிங்கன் தங்கள் நரம்பை இழந்த மற்றும் போரின் பயங்கரத்தில் தங்கள் பயத்தை வெளிப்படுத்திய வீரர்களுடன் பரிவு காட்டினார். அவருடைய பச்சாதாபம் தான் அவரை அவரது வீரர்களை நேசிக்க வைத்தது. அவர்கள் தங்கள் “பிதாவாகிய ஆபிரகாமை” நேசித்தார்கள், அவர்களுடைய பாசம் படையினரை லிங்கனுக்கு மிகவும் அதிகமாக சேவை செய்ய விரும்ப வைத்தது.

பவுல் தீமோத்தேயுவை “நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி.” என்று தன்னுடன் சேரும்படி அழைக்கும்போது (2 தீமோ. 2:3), அவர் ஒரு கடினமான வேலை விளக்கத்திற்கு அழைக்கிறார். ஒரு சிப்பாய் முற்றிலும் அர்ப்பணிப்புடன், கடின உழைப்பாளியாக, தன்னலமற்றவனாக இருக்க வேண்டும். அவர் தனது கட்டளை அதிகாரியான இயேசுவுக்கு முழு மனதுடன் சேவை செய்ய வேண்டும். ஆனால் உண்மையில், நாம் சில சமயங்களில் அவருடைய நல்ல வீரர்களாக இருக்கத் தவறிவிடுகிறோம். நாங்கள் எப்போதும் அவருக்கு உண்மையுடன் சேவை செய்வதில்லை. ஆகவே, பவுலின் ஆரம்ப சொற்றொடர் முக்கியமானது: “நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு” (வச. 1). நம்முடைய இரட்சகர் கிருபையால் நிறைந்தவர். அவர் நம்முடைய பலவீனங்களை உணர்ந்து நம் தோல்விகளை மன்னிப்பார். (எபிரெயர் 4:15). லிங்கனின் இரக்கத்தால் யூனியன் வீரர்கள் ஊக்கப்படுத்தப்பட்டதைப் போலவே, விசுவாசிகளும் இயேசுவின் கிருபையால் பலப்படுகிறார்கள். அவர் நம்மை நேசிக்கிறார் என்பது நமக்குத் தெரியும் என்பதால் நாம் அவருக்கு மேலும் சேவை செய்ய விரும்புகிறோம்.